வடலூர் அருகே மொபட் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வடலூர் அருகே உள்ள சேராக்குப்பம் சின்ன காலனி என்கிற ரோட்டு மருவாய் பகுதியை சேர்ந்த பால்சாமி மகன் கணேசன், நேற்று வடலூர் சேத்தியாத்தோப்பு சாலையில் மொபட்டில் மருவாய் நோக்கி சென்று கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் வந்த அரசு பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Read More