
தென்மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டில் எரிமலை வெடித்ததால் ஜப்பான் நாட்டின் கடற்கரை பகுதிகளில் சுனாமி ஏற்படும் சூழல் உள்ளதா என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் ஆய்வு நடத்தி வருகிறது. பப்புவா நியூ கினியா தீவில் உள்ள மவுண்ட் உலாவுன் எரிமலை பிற்பகல் 3.30 மணியளவில் வெடித்ததாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சீற்றத்துடன் வெடித்த எரிமலையிலிருந்து வெளியேறிய சாம்பல் நிற புகை சுமார் 50 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் எழும்பியதாகவும் தெரிவித்துள்ளது. எரிமலை வெடித்துள்ளதால் ஜப்பான் கடலோர பகுதிகளில் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதா என ஆய்வு நடத்திவரும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கடலோர பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.