
கோவையை சேர்ந்தவர் சுதர்சன் (23). இவர் தனது நண்பருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். நேற்று மாலை கோவைக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். காரை சுதர்சன் ஓட்டினார். அவரது நணபர் உள்ளே அமர்த்து இருந்தார். பண்ணைக்காடு அருகே மலைப்பாதையில் ஊத்து என்ற இடத்தில் கார் வந்தது. அப்போது அங்குள்ள வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதிய கார் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுதர்சன், அவரது நண்பர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.