
தருமபுரி மாவட்டம், அருர் பகுதியை சேர்ந்தவர் கோபால் (85), விவசாயி. கடந்த 18-ம் தேதி மொரப்பூர்-கல்லாவி சாலையில் நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் கோபால் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை தருமபுரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வந்த கோபால் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவருடைய மகன் ரவி அளித்த புகாரின் பேரில் மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.