
வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் நேற்று முன்தினம் இஸ்ரேல் விமானம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில்,12 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆனால், அங்குள்ள மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்ட உடல்கள் கிடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல், கான்யூனிசில் உள்ள குடியிருப்பில் நடந்த விமான குண்டுவீச்சில் 26 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இதுவரை 11 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்தனர்,2,700 பேர் மாயமாகியுள்ளனர் என பாலஸ்தீன சுகாதார துறை தெரிவித்துள்ளது.