
சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் தனது தொகுதியான படான் துர்க் மாவட்டத்தில் உள்ள குருதி கிராமத்தில் வாக்களித்தார். ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிசந்தன் மற்றும் அவரது மனைவி ராய்ப்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் பகுதியில் வாக்களித்தார். லோர்மி தொகுதியில் போட்டியிடும் மாநில பாஜ தலைவரும் எம்பியுமான அருண் சாவோ பிலாஸ்பூர் தொகுதியில் வாக்களித்தார். பாரத்பூர்-சோன்ஹாட் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ஒன்றிய அமைச்சர் ரேணுகா சிங், சூரஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பிரேம்நகர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு முடிவில் சட்டீஸ்கரில் 70.45 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தன.