
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில்,’ கடந்த ஆண்டை விட இந்த பண்டிகைக் காலத்தில் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 2,614 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு 6,754 கூடுதல் ரயில் பயணங்களை ரயில்வே இயக்குகிறது’ என்றார்.