
ஈரோடு பெரியவலசு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் செந்தில்குமார். இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். செந்தில்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இவருக்கு திருமணம் ஆகவில்லை என மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்த தாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த செந்தில்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரின் சகோதரர் தங்க ராஜ் ஈரோடு வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.