
நடிகை கார்த்திகாவுக்கு ரோகித் என்பவருடன் கடந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்கள் திருமணம் வருகிற 19-ந்தேதி காலை திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இந்த புகைப்படங்களை கார்த்திகா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார். தற்போது வருங்கால கணவரான ரோகித்துடன் இணைந்து எடுத்த ரொமான்ஸ் புகைப்படங்களை வலை தளங்களில் கார்த்திகா பதிவிட்டுள்ளார். புகைப்படத்துடன் “உன்னை சந்திக்க வேண்டும் என்று விதி எழுதப்பட்டுள்ளது. உன்னை விரும்பியது ஒரு மேஜிக்காக நிகழ்ந்தது. உன்னுடன் இணைந்து பயணிப்பதற்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது” என்று பதிவிட்டுள்ளார்.