
அதானி குறித்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்தரா தனது டிவிட்டர் பதிவில், ‘‘மோடியின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அதானி நிறுவன ஊழியர் ஜனார்தனை நிபுணர் குழு உறுப்பினராக சேர்த்துள்ளது. இந்த குழுதான் அதானியின் 6 திட்டங்களை (10,300 மெகாவாட் மின் உற்பத்திக்கானது) மதிப்பீடு செய்ய உள்ளது’’ என கூறி உள்ளார். அதானி நிறுவன ஆலோசகர், எப்படி, ஏன் அரசின் நிபுணர் குழுவில் சேர்க்கப்பபட்டார் என சிவசேனா கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.