
கோவையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுச் செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் பச்சை முத்து, கவுன்சிலரும் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவருமான ஜி. வி. நவீன் குமார் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்த பெண்கள் உள்பட காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.