
காசாவில் சிக்கிய காஷ்மீரை சேர்ந்த இந்திய பெண் லுப்ஜா நசிர் ஷாபூ அங்கிருந்து வெளியேற இந்திய தூதரகத்தின் உதவியை நாடியிருந்தார். இந்நிலையில் அவரும், அவரது மகள் கரிஷ்மாவும் நேற்று ரபா எல்லை வழியாக காசாவிலிருந்து பத்திரமாக வெளியேறி எகிப்தின் அல் அரிஷ் நகரை அடைந்துள்ளனர்.