
சென்னை வில்லிவாக்கம்பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (61). இவர் ரியல் எஸ்டேட் தொழிலாளி. திண்டுக்கல் வந்த இவர் பஸ் நிலையம் அருகே தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். இன்று காலை அவரது அறை கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து பக்கத்து அறையில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது பாத்ரூமில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவர்கள் நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.