
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 8 வருடங்களுக்கு பிறகு ‘ஜிகர்தண்டா’ படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தை பாராட்டி சவுந்தர்யா ரஜினிகாந்த் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘கார்த்திக் சுப்பராஜ் உங்களை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். என் அண்ணா ராகவ லாரன்ஸ் நடிப்பு அருமையாகவும் பெருமையாகவும் உள்ளது. எஸ்.ஜே. சூர்யா நீங்கள் ஒரு உத்வேகம். ‘ஜிகர்தண்டா 2’ படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.