
நாகர்கோவில் அடுத்த வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் அற்புதராஜ் (64), கூலி தொழிலாளி. இவருக்கு கண் நோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதனால் மனம் உடைந்த அற்புதராஜ், நேற்று வீட்டில் அருகில் உள்ள பூவரசு மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.