மலையாள சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பில் மீடியாக்களிடம் விளாசி தள்ளிய ஷைன் டாம் சாக்கோ

சமீபகாலமாக மலையாள சினிமா லொகேஷன்களில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாகப் பரவலாகப் புகார்களும் விவாதங்களும் கிளம்பி வருகின்றன. திரைப்பட நட்சத்திரங்கள் ஸ்ரீநாத் பாசி, ஷேன் நிகம் ஆகியோரின் தடைக்குப் பிறகு மீண்டும் இதுபோன்ற விவாதங்கள் உக்கிரமடைந்துள்ளன. லைவ் படத்தின் பிரீமியர் ஷோ முடிந்ததும், இந்த விஷயங்களைக் கேட்ட மீடியாக்களிடம் நடிகர் ஷைன் டாம் சாக்கோ சீறியிருக்கிறார் . இந்த மருந்துகள் எவ்வளவு காலம் கண்டுபிடிக்கப்பட்டன? உலகத்தின் தொடக்கத்திலிருந்தே இளைஞர்கள் இதைக் கொண்டு வந்தார்களா? அப்படியா? அப்படியா…? இதை சினிமாக்காரர்கள் கொண்டு வந்தார்களா? என்று சொல்பவர்களிடம்தான் கேட்க வேண்டும். அதை தற்போதைய இளைஞர்களோ, சினிமாக்காரர்களோ கொண்டு வரவில்லை. “எனது குழந்தைகளுக்கு எப்படி போதைப்பொருள் கிடைக்கிறது என்று பெற்றோர்கள் கேட்க வேண்டும்,” என்று ஷைன் டாம் பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *