தாளவாடியில் வீசிய சூறாவளிக்காற்று… மின்கம்பி துண்டிப்பு

நேற்று மாலை தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தன. பவானிசாகர் முதல் தாளவாடி வரை உயர் மின் கோபுரம் மூலம் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 2 மணியளவில் வீசிய சூறாவளி காற்றினால் உயர் மின் கோபுரத்தின் மின் கேபிள் அறுந்து விழுந்தது. இதனால் தாளவாடி மலைப்பகுதி முழுவதும் மின்சாரம் தடைபட்டது. நேற்று காலை மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மாலை 5 மணியளவில் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இதேபோல் தாளவாடி காவல் நிலைய வளாகத்தில் பலத்த காற்றையும் பொருட்படுத்தாமல் விழும் நிலையில் இருந்த பனைமரத்தை நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி அகற்றினர். இதனால் தாளவாடியில் இருந்து தொட்டகாஜனூர் செல்லும் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *