
வெடிகுண்டு வெடித்ததில் மூன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் காயம்
வெடிகுண்டுகள் வெடித்ததில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர். கம்யூனிஸ்ட் பயங்கரவாதிகள் புதைத்திருந்த ஐஇடி வெடிகுண்டு வெடித்ததால் வெடிவிபத்து ஏற்பட்டது. ஜார்கண்ட் மாநிலம் சாய்சாபா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ராகேஷ் பதக், பி.டி.அனல், பங்கஜ் யாதவ் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிஆர்பிஎஃப், ஜார்க்கண்ட் ஜாகுவார் மற்றும் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் படைகள் இணைந்து கம்யூனிஸ்ட் பயங்கரவாதி மிசிர் பெஸ்ரயா மற்றும் அவரது கும்பலுக்காக காட்டில் நடத்திய கூட்டு தேடுதலின் போது குண்டுவெடிப்பு ஏற்பட்டது. மாவட்ட காவல்துறை தலைவர் அசுதோஷ் சேகர் கூறுகையில், இதற்கு முன்பும் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்துள்ளன.