பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி…

அறுபடை வீடுகளில் மூன்றாவது வீடான பழனி முருகன் கோவிலை தரிசனம் செய்ய தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் உண்டியலில் பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை நேர்த்தியாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் கோவில் நிர்வாகத்தால் கணக்கிடப்படும். இதன்படி கடந்த 5 மற்றும் 6ம் தேதிகளில் பழனியில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இந்நிலையில், கடந்த 27ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில், நேற்று கும்பாபிஷேகம் முடிந்து பழனி மலைக்கோயிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. கோயில் இணை ஆணையர் நடராஜன் தலைமை வகித்தார். பின்னர் உண்டியல்கள் திறக்கப்பட்டு, பணம், தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள், பட்டு துணிகள் பிரிக்கப்பட்டன. இதனை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள், பழனி வட்டார வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி ஊழியர்கள், மாணவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். காணிக்கை எண்ணும் பணி இன்று (வியாழக்கிழமை) 2வது நாளாக தொடர்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *