ஜனவரி மாதத்தில் 66 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம்…. மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தகவல்

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு நம்பகமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை வழங்குகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தை விட ஜனவரி மாதத்தில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 121 பயணிகள் மெட்ரோ ரயிலில் அதிகளவில் பயணம் செய்துள்ளனர். ஜனவரி மாதத்தில் மட்டும் 21 லட்சத்து 96 ஆயிரத்து 536 பயணிகள் க்யூஆர் குறியீடு டிக்கெட் முறையைப் பயன்படுத்தி மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 39 லட்சம் பேர் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணம் செய்துள்ளனர். கியூஆர் குறியீடு டிக்கெட் மற்றும் பயண அட்டையைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு 20 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *