செங்குன்றம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலை…

சென்னை:  செங்குன்றம் அடுத்த வடகரை பாபா நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 35). இவர் சென்னை கொளத்தூர் அருகே உள்ள ராஜமங்கலம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இவர் கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு காவலர் சதீஷ் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டார். செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சதீஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காவலர் சதீஷ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *