சவுதியில் பேருந்து ஓட்டுநர்கள் நான்கரை மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது

சவுதி அரேபியாவில் பொதுப் போக்குவரத்து பேருந்து ஓட்டுநர்கள் நான்கரை மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து வேலை செய்ய பொதுப் போக்குவரத்து ஆணையம் தடை பிறப்பித்துள்ளது.
ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சாலை விபத்துகளைத் தவிர்ப்பதற்கும் PTA வழங்கிய வழிகாட்டுதல்களில் இதுவும் ஒன்றாகும். இது போக்குவரத்து சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதையும் குறிக்கோளாக கொண்டுள்ளது. ஒரு ஓட்டுநர் வாரத்திற்கு 56 மணிநேரத்திற்கு மேல் பேருந்தை ஓட்டக்கூடாது. ஒரு ஓட்டுநர் தொடர்ந்து இரண்டு வாரங்களில் 90 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது. ஓட்டுநரின் தினசரி ஓய்வு காலம் தொடர்ச்சியாக 11 மணிநேரத்திற்கு குறைவாக இருக்கக்கூடாது. தொடர்ந்து ஆறு நாட்கள் வேலை செய்த பிறகு ஓட்டுநர் பெறும் வாராந்திர ஓய்வு நேரம் 45 மணிநேரத்திற்கு குறைவாக இருக்கக்கூடாது என்பது நிபந்தனைகள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *