
கடும் அமளியால் ஒத்திவைக்கப்பட்ட மக்களவை…!!!
2023-2024ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு, நேற்று முன்தினம், ஜனாதிபதி உரையுடன், பார்லிமென்டின் இரு அவைகளும் திறக்கப்பட்டன. அதன்பிறகு, 2023-2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து இன்று மக்களவை காலை தொடங்கியது. இன்று காலை பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பார்லிமென்ட் நடவடிக்கைகளை கண்காணிக்க வெளிநாட்டு குழு வந்துள்ளதாக குறிப்பிட்டார். இதையடுத்து, அதானி குழும பங்குகளை எல்ஐசி வாங்குவது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதனால் மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மக்களவை இன்று பிற்பகல் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது தொடங்கிய நாடாளுமன்றத்தில் அதானி குழுமம் மீது மீண்டும் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் அனுமதி கோரின. இதையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.