அதிகார வரம்பை மீறிய உத்தரவு: ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற பட்டியல் கமிஷன் பிறப்பித்த உத்தரவு, அந்த ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்றும், எப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டாம் என தேசிய பட்டியல் ஆணைக்குழு கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, தேசிய பட்டியல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. பட்டியலின ஆணையம் தனது அதிகார வரம்பை மீறி எப்படி உத்தரவு பிறப்பித்தது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *