வெளிநாடு சென்ற மேயர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கும் எதிர்கட்சிகள்

நாட்டில் சாதாரணமாகவே ஒரு அரசியல்வாதி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தேர்தல் காலங்களில்தான் பெரிய அளவில் வெளியே வந்து அந்த அரசியல்வாதியை குடைந்தெடுத்துவிடும். மட்டக்களப்பு மாநகர முதல்வர் தொடர்பிலும் ஒரு குற்றச்சாட்டு தற்பொழுது முன்வைக்கப்பட்டுவருகின்றது. இலங்கையில்  தேர்தல் காலம் என்பதாலும், முதல்வர் சரவணபவன் தேர்தலில் போட்டியிடுகின்றார் என்பதினாலும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதிப்படுகின்றதாகவே நீண்டு வருகின்றது. மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சவணபவன் கனேடிய தமிழ் சமூகத்தின் அழைப்பில் பேரில் ஒன்டாரியோ மாநகர சபைக்கும் மட்டக்களப்பு மாநகர சபைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை செய்து கொள்வதற்கான ஆரம்ப கட்ட சந்திப்புகளை மேற்கொள்ளும் வகையிலும், கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், முதலீட்டு நிறுவனங்களின் பிரதானிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளும் பொங்கல் விழா போன்றவற்றில் பங்கேற்று கொள்ளும் நோக்கில் கனடா நாட்டுக்கு போயிருக்கிறார்.  ஜனவறி மாதம் 26 தேதி தான் கனடா செல்வதான கடிதத்தை அவர் 28ம் திகதி பிரதி முதல்வருக்கு வழங்கியதுதான் தற்பொழுது அவர் மீதான குற்றச்சாட்டாக தெரிவிக்கப்பட்டுவருகின்றது. முதல்வர் சரவனபவான் தமிழரசுக் கட்சி உறுப்பினர் என்பதும், பிரதி முதல்வர் ஒரு டெலோ உறுப்பினர் என்பதுமே பிரச்சனை மேலே கிளம்ப முக்கிய காரணமாகும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *