மாணவர்கள் முன் ஆசிரியரை கொன்ற மர்ம நபர்கள் கைது…!!!

உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் வசித்து வந்தவர் கிருஷ்ண குமார் யாதவ். தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். அவர் தனது சகோதரியுடன் வசித்து வருகிறார். சகோதரியும் ஆசிரியை. இந்நிலையில் அந்த ஊரை சேர்ந்த சந்தீப் யாதவ் என்பவர் தனது சகோதரியுடன் பேசி பழகியுள்ளார். இதற்கு கிருஷ்ணகுமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் சந்தீப் ஆத்திரமடைந்தார். இந்நிலையில், கிருஷ்ண குமார் தனது மாணவர்களுக்கு செல்போன் மற்றும் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தி வருகிறார். அப்போது திடீரென வந்த 2 பேர் கிருஷ்ணகுமாரிடம் தகராறு செய்தனர். இதில், தகராறு முற்றவே, அவரை அடித்து, தாக்கி கொன்றனர். இந்த காட்சிகள் போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைக் கண்டு மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் வந்து செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் சந்தீப் மற்றும் அவரது நண்பர் ஜக்கா இருவரும் கொலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *