பொருளாதார ஆய்வறிக்கையின்படி, நாட்டின் 65 சதவீத மக்கள் கிராமங்களில் வசிக்கின்றனர்

பொருளாதார ஆய்வறிக்கையின்படி, நாட்டின் 65 சதவீத மக்கள் கிராமங்களில் வசிக்கின்றனர். 2021 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, 47 சதவீத மக்களின் வாழ்வாதாரம் விவசாயம் என்று கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை 2.1 கோடி வீடுகள் கிராமப்புறங்களில் கட்டப்பட்டுள்ளன. வீடற்றவர்களுக்கு நல்ல வீட்டை உறுதி செய்வதற்காக 2016 ஆம் ஆண்டு மத்திய அரசால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2024க்குள் மூன்று கோடி வீடுகள் கட்டும் திட்டத்தில் 2.7 கோடி வீடுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஜனவரி முதல் வாரத்தில் 2.1 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 52.8 லட்சம் வீடுகளில் 32.4 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 11 கோடி வீடுகளுக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி கிராமினா சாலைத் திட்டத்தின் கீழ் 1.74 லட்சம் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *