
நீங்கள் இன்னும் முன்னேற வேண்டும் – அர்ஷ்தீப் சிங்கை சாடிய கம்பீர்
இந்திய அணியில், உம்ரான் மாலிக், சிராஜ் போல் அர்ஷ்தீப்சிங் வேகம் இல்லை என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார். இது குறித்து கூறுகையில், நீங்கள் நோ-பால் வீசுவதை எந்த வகையிலும் ஏற்று கொள்ள முடியாது. அது முக்கிய நேரத்தில் உங்களது வெற்றியை எதிரணிக்கு தாரை வார்க்கலாம். முந்தைய போட்டியிலும் அதுதான் நடந்தது. இதை தவிர்க்க அடிப்படையை சரியாக பின்பற்றுங்கள்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையும் சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளும் முற்றிலும் வித்தியாசமானது. நீங்கள் மெதுவான பந்துகள் அல்லது ஸ்லோயர் பவுன்சர்கள் போன்றவற்றை வீச வேண்டும். மேலும் சில வேரியேஷன் இருக்க வேண்டும். சில வேரியேஷன்களில் முன்னேற்றம் காண வேண்டும்.
ஏனெனில் அவர் முகமது சிராஜ் அல்லது உம்ரான் மாலிக் கிடையாது. எனவே அடிப்படையை எளிமையாக பின்பற்ற வேண்டிய அர்ஷ்தீப்சிங் நோ-பால் வீசுவதை தவிர்க்க வேண்டும். என்று கம்பீர் கூறினார்.