காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய சறுக்கு வீரர்கள் பத்திரமாக மீட்பு…!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மார்க் பகுதியில் உள்ள பிரபலமான பனிச்சறுக்கு மையத்தில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அபர்வத் சிகரத்தில் ஏற்பட்ட இந்த பனிச்சரிவில் 21 வெளிநாட்டு சறுக்கு வீரர்கள் மற்றும் 2 உள்ளூர் வழிகாட்டிகள் சிக்கினர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் பாரமுல்லா போலீசார் மற்றும் சுற்றுலா துறையின் கூட்டு மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 19 சறுக்கு வீரர்கள் மற்றும் 2 உள்ளூர் வழிகாட்டிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் வெளிநாட்டு சறுக்கு வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *