கரூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தாய், மகன் படுகாயம்…

கரூர் மாவட்டம், காவலூர் ஊராட்சி தெலுங்கு பட்டி காலனியை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 32). இவர் தனது தாய் வரமதியுடன் (52) மோட்டார் சைக்கிளில் தோகைமலை – மணப்பாறை பிரதான சாலையில் இறந்தார். அப்போது பொன்னம்பட்டியை சேர்ந்த தீபன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சத்யராஜ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

விபத்தில் பலத்த காயமடைந்த சத்யராஜ், வரமதி ஆகிய இருவரையும் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *