
கன்னியாகுமரியில்.கால்வாயில் மிதந்து வந்த பெண் பிணம்…
கன்னியாகுமரியில்: அஞ்சுகிராமம் அருகே உள்ள மயிலாடி குண்டு பாலம் அருகே உள்ள கால்வாயில் நேற்று காலை 85 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலம் மிதந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். இறந்தது யார்? விசாரணை நடத்தப்பட்டது. எனினும் உயிரிழந்தவர் குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மயிலாடி கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) ஹரிநைனார் பிள்ளை அளித்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன், சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். மற்றும் இறந்தது யார்? அவர் எப்படி இறந்தார்? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.