
ஜனவரி 25, வரலாற்றில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்
41 – குளோடியசு உரோமைப் பேரரசராக உரோமை மேலவையால் அறிவிக்கப்பட்டார்.
750 – அப்பாசியக் கலீபக கிளர்ச்சியாளர்கள் சாப் என்ற இடத்தில் நடந்த போரில் உமையா கலீபகத்தை தோற்கடித்தனர்.
1348 – இத்தாலியின் பிரியூலி பகுதியைப் பெரும் நிலநடுக்கம் தாக்கியதில், பெரும் சேதம் ஏற்பட்டது.
1498 – போர்த்துக்கீச நாடுகாண்பயணி வாஸ்கோ ட காமா தென்கிழக்கு ஆபிரிக்காவை அடைந்தார்.
1515 – பிரான்சின் மன்னராக முதலாம் பிரான்சிசு முடிசூடினார்.
1533 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி ஆன் பொலினைத் தனது இரண்டாவது மனைவியாக இரகசியத் திருமணம் புரிந்து கொண்டார்.
1755 – மாஸ்கோ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1765 – போக்லாந்து தீவுகளில் முதலாவது பிரித்தானியக் குடியேற்றம் எக்மண்ட் துறையில் ஆரம்பமானது.
1791 – பழைய கியூபெக் மாகாணம் மேல் கனடா, கீழ் கனடா என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.