
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து
செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் பகுதியில் இருந்து ஒரகடம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரி எழிச்சூர் அருகே வரும்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த ஒரகடம் போலீசார் படுகாயம் அடைந்த நபரை மீட்டு தனியார் ஆஸ்பத்தியில் அனுமதித்தனர். விசாரணையில் அந்த நபர் எழிச்சூர் பகுதியை சேர்ந்த சரத்குமார் (வயது 28) என்பதும் தனது 3 வயது குழந்தையுடன் வந்தது தெரிய வந்தது. குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்தில் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். மேலும் இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.