
மர்ம காய்ச்சலால் உயிரிழந்த பெண் குழந்தை… பீதியில் மக்கள்..!!
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையார் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 37). இவரது மனைவி ஜெயஸ்ரீ (32). இவர்களுக்கு தர்ஷன் (9) என்ற மகனும், 3½ வயதில் சிவதர்ஷினி என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் குழந்தை சிவதர்ஷினி கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து குழந்தையின் பெற்றோர் சிவதர்ஷினியை பரமத்திவேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதையடுத்து சிவதர்ஷினி மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் குழந்தை சிவதர்ஷினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மர்ம காய்ச்சலால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.