புதுச்சேரியில் பரபரப்பு… 9ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!!

டியூசன் செல்லாத தந்தையை கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் புதுச்சேரியில் நடந்துள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை கணேஷ் நகரைச் சேர்ந்த தசரதன் மகன் பாலமுருகன். இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலமுருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், சிறுவன் கடந்த 2 நாட்களாக டியூஷனுக்கு வரவில்லை. தந்தை கண்டித்ததால் மனமுடைந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *