
செங்கல்பட்டு தொகுதி ஆதரவாளர்களை சந்திக்கும் சசிகலா…!!!
செங்கல்பட்டு சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள ஆதரவாளர்களை சசிகலா இன்று சந்திக்கிறார். அ.தி.மு.க.வை இணைக்க முயற்சிப்பதாக கூறி, பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் சசிகலா. பின்னர் பொதுமக்களிடம் பேசி ஆதரவு திரட்டினார். அதன்படி இன்று மாலை செங்கல்பட்டு தொகுதிக்குட்பட்ட கோல்பாக்கத்தில் இருந்து சசிகலா தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். சிறமலர் நகர், சிங்கபெருமாள் கோயில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம், திருக்கழுக்குன்றம் போன்ற இடங்களுக்குச் சென்று தனது ஆதரவாளர்களையும், பொதுமக்களையும் சந்திக்கிறார்.
இதற்காக இன்று மாலை தி.நகரில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்டு கிண்டி, குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர் வழியாக கொல்பாக்கம் சென்றடைகிறார் சசிகலா. பின்னர் அங்கிருந்து தனது பிரசாரத்தை தொடங்குகிறார். வரும் வழியில் சசிகலாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை சசிகலா ஆதரவாளர்கள் செய்துள்ளனர். சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.