கரும்பு விவசாயிகளை சந்தித்து பேசிய ஹெச்.ராஜா..!!

மேலூர் பகுதியில் பா.ஜ.க. முன்னாள் தேசிய தலைவர் ஹெச்.ராஜா கரும்பு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். அதன்பேரில், நாவினிப்பட்டி, எட்டிமங்கலம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று தமிழக அரசின் பொங்கல் கரும்பு கொள்முதல் குறித்து கேட்டறிந்தார். அப்போது, 6 அடி உயரமுள்ள கரும்புகளை மட்டும் கொள்முதல் செய்வதால், மீதமுள்ள கரும்புகள் வீணாகி நஷ்டம் ஏற்படுவதாகவும், செலவுகளை குறைத்து கரும்பு ஒன்றுக்கு 16 ரூபாய் செலுத்துவதால் நஷ்டம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். ஹெச்.ராஜாவுடன் மேலூர் நிர்வாகி ரகு என்கிற விஜயராகவன் உடன் இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *