
எல்லையில் 2 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு வீரர்கள்..!!
ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய பயங்கரவாதிகள் முயற்சித்து வருகின்றனர். அவர்களை தடுக்க ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், ஜம்முவின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலகோட் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக 2 பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றனர். அப்போது, இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு சுட்டுக் கொன்றனர். இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.