
அரசுக்கு எதிரான கலவரம்… பிரேசில் அதிகாரிகளுக்கு ஆதரவளிக்கும் பிரதமர் மோடி…!!!
பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தேர்தல் தோல்வியை ஏற்க முடியாமல் காங்கிரஸ் கட்டிடம், உச்சநீதிமன்றம் மற்றும் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “பிரேசிலில் அரசு நிறுவனங்களுக்கு எதிரான கலவரங்கள் மற்றும் நாசவேலைகள் குறித்த செய்திகள் குறித்து ஆழ்ந்த கவலை. ஜனநாயக மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும். பிரேசில் அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்குகிறோம்.