
ராஜஸ்தான் விவசாயிகளுக்கு கடன் உதவி… அறிவித்த நிர்மலா சீதாராமன்..!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் பங்கேற்றனர். நிர்மலா சீதாராமன் பேசுகையில், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ராஜஸ்தானில் 2,363 விவசாயிகளுக்கு 3 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. 9 ஆயிரம் விவசாயிகளுக்கு ரொக்கமாகவோ அல்லது டிராக்டர் உள்ளிட்ட விவசாய உபகரணங்கள் வாங்கவோ கடன் உதவி வழங்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதேபோல் முத்ரா திட்டத்தின் கீழ் 3,700 பேருக்கு 40 கோடி ரூபாயும், 20 தொழில் முனைவோருக்கு 2 கோடி ரூபாயும் கடன் உதவி வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.