
மீன் விற்பனை தொழிலில் தகராறு : வாலிபருக்கு அரிவாள் வெட்டு
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சமாதானபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (26). மீன் வியாபாரியான இவருக்கும் மற்றொரு தரப்புக்கும் இடையே மீன் தொழில் செய்வது தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இதனிடையே நேற்று இரவு 2 பேர் சேர்ந்து ஜெகதீஷை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.