
மாநிலத்தில் 5ஜி இணைய சேவையை தொடங்கி வைத்த ராஜஸ்தான் முதல்வர்..!!
ராஜஸ்தான் மாநிலத்தில் 5ஜி இணைய சேவையை முதல்வர் அசோக் கெலாட் நேற்று தொடங்கி வைத்தார். ஜெய்ப்பூர், ஜோத்பூர் மற்றும் உதய்பூர் நகரங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. விழாவில் பேசிய முதல்வர் அசோக் கெலாட், ஐடி மற்றும் தொலைத்தொடர்பு துறையில் புரட்சிகரமான புதிய படியாக 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது என்றார். இந்த அதிவேக சேவையின் மூலம் நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுமை என்ற கனவு மேலும் வலுப்பெறும். அதே சமயம், அதிகரித்து வரும் இணைய மோசடிகள் மற்றும் சவால்கள் குறித்து ஆன்லைன் பயனர்கள் கவனமாக இருக்க வேண்டும்.’ இவ்வாறு அவர் பேசினார்.