
பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், பொங்கல் பரிசாக வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் தமிழகம் முழுவதும் நாளை (திங்கள்கிழமை) பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் தொடங்கப்படவுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைக்கிறார் இதைத் தொடா்ந்து, பிற மாவட்டங்களிலும் தொடங்கப்படுகிறது. வரும் 13-ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது