‘பாரத் ஜோடோ யாத்ரா’… கபடி போட்டியை பார்த்து ரசித்த ராகுல் காந்தி…!!!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்ல 150 நாட்கள் ஆகும். கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை தற்போது கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வழியாக அரியானாவை வந்தடைந்துள்ளது. பாரத் ஜோடோ யாத்ரா கடந்த 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை அரிவா வழியாக சென்றது, தற்போது மீண்டும் அரியானாவில் யாத்ரா நுழைந்துள்ளது. இந்நிலையில் நேற்று பாரத் ஜோடோ யாத்திரையின் போது கபடி போட்டியை ராகுல் காந்தி பார்த்தார். ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் நடந்த உள்ளூர் கபடி போட்டியை ராகுல் காந்தி பார்த்தார். அப்போது ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜிந்தர் சிங் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் ராகுல் காந்தியுடன் கபடி போட்டியை கண்டுகளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *