
பாஜக எதிர்காலத்தில் அரசியலமைப்பை அழித்துவிடும்… மெகபூபா முப்தி சாடல்…!!!
காஷ்மீர் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முப்தி முகமது சயீத்தின் 7வது நினைவு தினம் நேற்று ஸ்ரீநகரில் நடைபெற்றது. இதில் அவரது மகளும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தியும் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:- எந்த நாடும் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக போரிட்டு வெற்றி பெற முடியாது. பா.ஜ.க. நாட்டின் தேசியக் கொடியை மாற்றி காவி கொடியை கொண்டு வரும். 2019ல் நாட்டின் அரசியலமைப்பை பாஜக அழித்தது. எதிர்காலத்தில் அரசியலமைப்பு அழிக்கப்படும். என்று அவர் கூறினார்.