
நீரில் மூழ்கி சலூன் கடை உரிமையாளர் பலி
கோவை சுண்டக்காமுத்தூரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 32). இவர் அதே பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் அவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று சத்தியமூர்த்தி மது குடித்தார். பின்னர் குடிபோதையில் சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றார். அங்கு கிணற்றில் குளித்து கொண்டு இருந்த போது திடீரென நீரில் மூழ்கி தத்தளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அவர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சத்தியமூர்த்தியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.