
தாயின் அஸ்தியை கங்கை நதியில் கரைத்த பிரதமரின் தம்பி…!!!
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் வயது முதிர்வு காரணமாக டிசம்பர் 30ஆம் தேதி தனது 90வது வயதில் காலமானார்.அவரது மறைவுக்கு பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஹீராபெனின் உடல் கடந்த 30ம் தேதி தகனம் செய்யப்பட்டது. பிரதமர் மோடி தனது தாயின் உடலுக்கு தீ மூட்டினார். இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்னின் அஸ்தி நேற்று கங்கை நதியில் கரைக்கப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் தனது தாய் ஹீராபென்னின் அஸ்தியை பிரதமர் மோடியின் தம்பி பங்கஜ் மோடி கரைத்தார்.