
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அமைச்சர் சேகர்பாபு திடீர் ஆய்வு
சென்னை கோயம்பேடு காய்கறி, பழங்கள் மார்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், மார்கெட்டை சுற்றியுள்ள சாலையோர வியாபாரங்களையும் முறைப்படுத்த திட்டம் உள்ளது. மார்கெட்டில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, தொழிலாளர்கள் தங்குமிடம் ஆகியவற்றை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பண்டிகை கால சிறப்பு சந்தையின் போது இடைத்தரகர்கள் இடையூறு செய்வதை கட்டுப்படுத்துவோம். கோயம்பேடு சந்தையை மேம்படுத்த ஏற்கனவே ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கை பெறப்பட்டு மேற்கொண்டு மேம்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.