
கடும் பனிப்பொழிவு… டெல்லியில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு
வட மாநிலங்களில் பொதுவாக குளிர்காலத்தில் கடுமையான பனிப்பொழிவு இருக்கும். இந்த வகையில் இந்த ஆண்டு இமாச்சல பிரதேசம், பஞ்சாப், டெல்லி, காஷ்மீர், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. சாலைகளில் பனிமூட்டம் காரணமாக சில விபத்துகளும் நடக்கின்றன. இந்நிலையில், டெல்லியில் அரசு பள்ளிகளுக்கு 15ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை முடிந்து தனியார் பள்ளிகள் 9ம் தேதி (நாளை) முதல் வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதால் தனியார் பள்ளிகளுக்கு வரும் 15ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்க டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது. டெல்லியில் இன்று குறைந்தபட்சமாக 1.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில் டெல்லி அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.