கடத்த முயன்ற 700 லிட்டர் மண்எண்ணை பறிமுதல்

குளச்சல் மரைன் இன்ஸ்பெக்டர் நவீன் உத்தர வுப்படி சப் – இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் நேற்றிரவு மணவாளக்குறிச்சி, அழிக்கால், பிள்ளைத்தோப்பு ஆகிய பகுதியில் தீவிர ரோந்து சென்றனர். முட்டம் சோதனைச் சாவடியில் செல்லும் போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக ஒரு சொகுசு கார் வந்தது. அதனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.அப்போது காருக்குள் 22 பிளாஸ்டிக் கேன்களில் 700 லிட்டர் மண்எண்ணை கடத்தி செல்ல முயற்சித்தது தெரிய வந்தது. இதையடுத்து மண்எண்ணையை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த மண்எண்ணை மீன் பிடி வள்ளங்களுக்கு அரசு மானியமாக வழங்கப்படும் மண்எண்ணை என கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் காரை ஓட்டி வந்த சாமியார்மடத்தை சேர்ந்த ஸ்டாலின் (வயது 37) மற்றும் அவருடன் வந்த கிரிபிரசாத் (47) ஆகியோரையும், பறிமுதல் செய்த மண்எண்ணையையும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *